articles

உலகின் உச்சியில் ஒரு காலநிலை ஆய்வுக்கூடம்

    உலகின் உயரமான காலநிலை ஆய்வுக் கூடத்தை தேசிய புவியியல் சங்கம் அமைத்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8830 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்ப பட்டுள்ளது. காலநிலையில் வெவ்வேறு பருவ காலங் களில் நிகழும் மாற்றங்களை மனிதர்களின் உதவியின்றி இந்த மையத்தால் கண்காணிக்க முடியும்.

    எவரெஸ்ட்டின் உயரம் 8848.86 மீட்டர். உலகின் உச்சியில் இருப்பதால் இங்கு பனிப்பாறைகள் உறைந்து காணப்படுகின்றன.காலநிலையில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடிய வில்லை என்பதால்  புதிய ஆய்வுக்கூடம் சிகரத்தின் உச்சியில் இருந்து 19 மீட்டர் கீழாக நிறுவப்பட்டுள்ளது.

   இந்த கூடம் முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கு கிறது. வாயு மண்டல வெப்பம், காற்றின் வேகம் மற்றும் திசை, காற்றின் அழுத்தம், பனிப்படலத்தின் மேற்பரப்பின் உயரம், மற்றவற்றைப் பற்றி இந்தமையம் விவரங்களை அளிக்கும். யுஎஸ் ஆக்ரேஜியன் ஸ்டேட் பல்கலைக்கழக காலநிலை ஆய்வாளர் பேக்கர் பெரி மையத்தின் திட்டமிடல், உருவாக்கத்திற்கு தலைமை வகித்தார்.

எவரெஸ்ட்டில் பெற்ற அனுபவம்

    புவியியல் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருமாத காலம் எவரெஸ்ட் பகுதியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். பழுதடைந்த பழைய நிலையங்களை நவீனப்படுத்தினர். 2025 வரை சங்கத்தினர் இந்த மையங்களை நேரடியாக நிர்வகிப்பர். அடுத்த ஆண்டு மையத்தை நிர்வகிக்கத் தேவையான தொழில்நுட்ப விவரங்களை இவர்கள் நேபாள அரசிற்கு அளிப்பர். இந்த மையம் தொடங்கப்பட்டதன் மூலம் உலகின் உச்சியில் துல்லியமான காலநிலை மாற்றம் குறித்த விவரங்களைப் பெற உலகிற்கு புதியதொரு ஆய்வுக்கூடம் கிடைத்துள்ளது.